முஸ்லிம்களையும் நபிகள் நாயகத்தையும் வம்பிக்கிழுத்த பொய் பகுத்தறிவுவாதிகளின் "உண்மை" எனும் ஏட்டுக்கு உணர்வு இதழ் விடுத்துக்கொண்டிருக்கும் அறைகூவின் தொகுப்பு!


போலி பகுத்தறிவுவாதிகளோடு விவாதிக்க உணர்வு இதழ் அறைகூவல். உண்மை ஏட்டுக்கு பதிலடி பாகம் - 18

போலி பகுத்தறிவுவாதிகளின் மற்றொரு மூடநம்பிக்கையானது உருவப்பட திறப்புகளும், அதற்கான விழாக்களுமாகும்.

உருவப்படங்களும் சிலைகளும்

உலகத்தில் சீர்திருத்தக் கருத்துக்களைக் கூறியவர்களை சீர்திருத்தக் கருத்துக்களைக் கூறியதாக கருதப்பட்டவர்களை மதிக்கிறோம் என்ற பெயரில் உருவப்படங்களும், சிலைகளும் உருவாக்கப்பட்டன. பின்னர் படிப்படியாக மக்கள் மனநிலையில் மாற்றம் ஏற்பட்டு அவர்கள் அவதாரங்கள் எனவும், தெய்வங்கள் எனவும் கருதப்படும் நிலையும் ஏற்பட்டது.

எந்த மதத்தவரும் தமது வழிகாட்டிகளை மதிப்பதைவிட நபிகள் நாயகத்தை முஸ்லிம்கள் அதிகம் மதிக்கின்றார்கள். நபிகள் நாயகம் அளவுக்கு மதிக்கப்படும் தலைவர் உலகில் இல்லை எனலாம். எவ்வளவுதான் நபிகள் நாயகத்தை முஸ்லிம்கள் மதித்தாலும் அவர்களைக் கடவுள் என்று முஸ்லிம்கள் கருதுவதில்லை. நபிகள் நாயகத்தை வழிபடுவதும் இல்லை.

ஆனால் மற்ற அனைவரும் கடவுள் அந்தஸ்தில் வைக்கப்பட்டுள்ளனர்.

இதற்கான காரணங்களில் முதன்மையானது மற்றவர்களுக்கு உருவப்படமும், சிலைகளும் உருவாக்கப்பட்டன. ஆனால் நபிகள் நாயகத்துக்கு உருவப்படமும் இல்லை. சிலையும் இல்லை.

எந்த செயலால் என்ன விளைவு ஏற்படுகின்றது என்பதன் அடிப்படையில் முடிவு செய்வதுதான் பகுத்தறிவு.

ஆனால் உருவப்படங்கள் திறப்பதை நியாயப்படுத்தி பெரியார் எடுத்துவைக்கும் வாதங்கள் எதுவும் பகுத்தறிவுபூர்வமானதாக இல்லை.

நாம் உருவப்படத் திறப்பு விழா நடத்துவது என்பது பூசை செய்யவோ, தேங்காய், பழம் ஆராதனை செய்து, விழுந்து கும்பிட்டுப் பக்தி செய்து, நமக்கு வேண்டியதைக் கோரிப் பிரார்த்தனை செய்யவோ, நாம் செய்த - செய்யும் பாவத்தை மன்னிக்கும்படி கேட்கவோ அல்ல என்பதை முதலில் தெரிவித்துக் கொள்ளுகிறேன். அப்படிப்பட்ட சக்தி இருப்பதாகக் கருதிக்கூட நாம் எந்தப் படத்திறப்பு விழாவும் செய்வதில்லை. மற்றும், எப்படிப்பட்ட படத்திற்கும் பூசை செய்யும்படியோ, கோவில்களிலோ தேர், இரதம், விமானம், சப்பரம் ஆகியவைகளிலோ வைத்து ஊர்வலம் ஆராதனை செய்யும்படி காலித்தனம் செய்வதற்கோ அல்ல.

ஆனால் மற்றெதற்கு என்றால், மனித சமூக நலனுக்கு - சுயநலமில்லாமலும், மற்றவர்களிடமும் எவ்விதக் கூலியோ, புகழோ, பிரயோஜனமோ பெறாமலும், தன் முயற்சியால், தன் பொருளால், தன் பொறுப்பென்று கருதித் தொண்டாற்றி வந்த பெரியார்களின் குணாதிசயங்களையும் தொண்டையும் எடுத்துச் சொல்வதன் மூலம், மற்றும் பலரும் அக்காரியத்தைப் பின்பற்ற வேண்டும் - பின்பற்ற மாட்டார்களா என்பதற்காகவேதான். மனித சமூக நலனுக்குப் பிரதிப் பிரயோஜனம், கூலி இல்லாமல் மக்கள் பாடுபட வேண்டும் என்கின்ற மேலான குணத்தைப் பிரச்சாரம் செய்வதற்கு ஒரு சாதனமாகவேதான் இக்காரியத்தைச் செய்கிறோம். (‘குடிஅரசு’ 10-1-1948)

பெரியாரின் வாக்குமூலமும், முரணபாடும்

இப்படி காரணம் கற்பித்த பெரியார் அடுத்த பாராவிலேயே தனது இந்த வாதம் தவறு என்று தன்னையும் அறியாமல் வாக்குமூலம் தருகிறார்.

உதாரணமாக, கிரீஸ் தேசத்துச் சாக்ரடீஸ் என்பவர் - எந்தக் காரியத்தையும் அறிவால் ஆராய்ச்சி செய்து பார்க்க வேண்டும் என்று சொன்னதற்காக விஷம் கொடுத்துக் கொல்லப்பட்டார்.

கவுதம் புத்தர் என்பவர் - ஆரியப் புரட்டுகளை எதிர்த்ததற்காக எவ்வளவோ கஷ்டப்பட்டார்.

இயேசு கிறித்து விக்கிரக ஆராதனை, கோவில் பூசை முதலியவைகளை எதிர்த்துப் பிரச்சாரம் செய்ததற்காகச் சித்ரவதை செய்து கொல்லப்பட்டார்.

முகமது நபி அனேக மூடப்பழக்க வழக்கங்களையும் பல தெய்வ உணர்ச்சியையும் பெண் கொடுமையையும் எதிர்த்துப் பல நல்ல கொள்கைகளைப் பிரச்சாரம் செய்ததற்காகப் பல முறை சங்கடப்படுத்தப்பட்டார்.

அப்படிப்பட்டவர்களும் மற்றும் அது போன்ற பல புதிய அபிப்பிராயம் சொன்னவர்களும் அவர்களது ஆயுள் காலத்தில் இதுபோல் எவ்வளவு துன்பப்படுத்தப்பட்டு, எவ்வளவு கஷ்டப்படுத்தப்பட்டு, எவ்வளவு தொல்லைப்படுத்தப் பட்டு இருந்தாலும் இன்று அவர்கள் கோடானுகோடி மக்களால் அவர்களது அபிப்பிராயங்களோடு மதிக்கப்படுகிறார்கள்; கோடிக்கணக்கான பேர்களால் பின்பற்றப்படுகிறார்கள்.

அது போலவே தான், நாங்களும் இன்று எங்கள் அபிப்பிராயங்கள் எவ்வளவுதான் வெறுக்கப்பட்ட போதிலும், பாமர மக்களாலும், சுயநலச் சூழ்ச்சிக்காரர்களாலும் எவ்வளவுதான் வெறுக்கப்பட்டுத் தொல்லைகள் விளைவிக்கப்பட்டு அல்லல்பட்டாலும், பிற்காலத்தில் எங்கள் தொண்டு மக்களுக்கு மிக்க பயன் தரக்கூடியதாயும் பாராட்டக்கூடியதாயும், மக்களை ஞானவழியில் நடத்தக் கூடியதாயும் இருக்கும் என்கின்ற நம்பிக்கையுடையவர்களாகவே இருக்கிறோம். இல்லாவிட்டால் இவ்வளவு தொல்லைகளுடன் எங்களுக்கு எவ்விதத்திலும் சுயநலமற்ற இந்தத் தொண்டைப் பெரும்பான்மையான மக்களுடைய இவ்வளவு வெறுப்பிற்கிடையில் துணிந்து ஆற்ற முனைந்திருக்க மாட்டோம். (‘குடிஅரசு’ 10-1-1948)

பெரியார் இங்கே யாரையெல்லாம் சுட்டிக் காட்டுகிறாரோ அவர்களில் நபிகள் நாயகத்தைத் தவிர மற்றவர்கள் தெய்வங்களாகவும், தெய்வ நிலையில் வைத்து போற்றப்படுவது அனைவரும் அறிந்த உண்மை.

இதுபோல புகழப்பட வேண்டும் என்பதற்காக நாங்களும் உருவப்படம் திறக்கிறோம் என்று கூறுகிறார். அதாவது ஏசு, புத்தர் ஆகியோர் எவ்வாறு மதிக்கப்பட்டார்களோ அவ்வாறு மதிக்கப்பட வேண்டும் என்பதற்காகவே உருவப்படங்கள் என்று தனக்குத்தானே முரண்படுகிறார்.

அறிந்து கொண்டே நியாயப்படுத்துகின்றார்

இதற்கு அடுத்த பாராவில் அவர் கூறுவது இதைவிட வேடிக்கையானது.

பிரச்சாரம் செய்வதற்கு உருவப்படம் பயன்படும் என்று வாதிடும் பெரியார் இதனால் ஒரு பயனும் ஏற்படாது என்கிறார். பெரியார் என்னதான் சொல்ல வருகிறார் என்பதை வீரமணியாலும் விளக்க முடியாது.

நாமறிய ஒரு காலத்தில் திலகர் புகழப்பட்டார்; பெசண்ட் அம்மையார் புகழப்பட்டார்; காந்தியும் புகழ்ப்படுகிறார். சரித்திரத்தில் எத்தனையோ ஆச்சாரியார்கள், நாயன்மார்கள், ஆழ்வார்கள், சுவாமிமார்கள் எனப்பட்ட எத்தனையோ பேர் புகழப்பட்டதாகவும் பார்க்கிறோம். இவர்களில் பலர் ‘தெய்வீகம்’ கற்பிக்கப்பட்டார்கள்; பலர் தெய்வங்களாகவும் கருதப்பட்டிருக்கிறார்கள். ஆனால் இவர்களெல்லாம் ஒரு காதொடிந்த ஊசியளவு பயன் மக்களுக்கு ஏற்படுகிறதா? ஏற்பட்டதா? ஏற்படும் என்கின்ற குறியாவது காணப்படுகின்றதா? இவர்கள் எல்லாம் புராணங்களுக்குப் புதிய உரை எழுதுகிற உரையாசிரியர்கள் போல் தோன்றி, பாமரர்களுடைய பக்திக்கும் பூசைக்கும் ஆளாகி, முட்டாள் தனத்துடனும் அல்லது பாமர மக்களை ஏமாற்றிப் பொய்ப் புகழ் பெற்று வருகிறோம் என்கின்ற உணர்ச்சியுடனும் தானே செத்தார்கள் - சாகின்றார்கள் - சாகப்போகின்றார்கள் என்று சொல்ல வேண்டி இருக்கிறதே தவிர, கண்கண்ட பயன் என்ன என்று பாருங்கள்! (‘குடிஅரசு’ 10-1-1948)

உருவப்படத்தால் ஏற்பட்ட விளைவுகளை அவர் நன்கு அறிந்து கொண்டேதான் உருவப்படங்களை அவர் நியாயப்படுத்துகிறார்.

அப்பேர்ப்பட்டவர்கள் எல்லாம் மக்களின் தன்மை உயர வேண்டுமென்று கருதித் தொண்டாற்றியவர்களே ஒழிய, மக்கள் தங்களைப் போற்றிப் புகழ்ந்து பூசிக்க வேண்டுமென்று கருதியவர்கள் அல்லர். ஆதலால் அப்பெரியவர்களை ஞாபகப்படுத்தி - அவர்களின் தன்மையை மற்ற மக்கள் உணர்ந்து, அம்மாதிரியான உள்ளம் பெற்று சமூகத்துக்குத் தொண்டாற்ற முற்படவேண்டும் என்பதற்காகவே அவர்களது உருவப் படத் திறப்பு விழாக்கள் என்ற பெயர் வைத்து இவற்றை எடுத்துக் கொள்கிறோம். (‘குடிஅரசு’ 10-1-1948)

ஆகவே, நாம் நினைவு நாள் கொண்டாடும் மக்களை, உண்மையான மனிதர்களாய்க் கருதி, அவர்களது மனிதத் தன்மையை மதித்து, மற்றவர்களும் அந்தத் தன்மைக்கு வரவேண்டுமென்கிற ஆசைக்காக, எடுத்துக்காட்டுக்காக, பிரச்சாரத்திற்காகக் கொண்டாடுகிறோம். (‘குடிஅரசு’ 14-4-1945)

உருவப்படங்களைத் திறப்பதால் அதைப்பார்த்து அவரது கொள்கைகளை மக்கள் ஏற்றுக்கொள்வார்கள் என்று பெரியார் வாதிடுவதிலும் எந்த உண்மையும் இல்லை.

உறுதியான நிலைப்பாடே மாற்றம் தரும்


உறுதியான நிலைப்பாடு, தளர்வில்லாத பிரச்சாரம் ஆகியவற்றால்தான் ஒரு மனிதனிடம் மாற்றத்தை ஏற்படுத்த முடியுமே தவிர சிலைகளையும், உருவப்படங்களையும் நிறுவுவதால் அல்ல.

சென்னையில் எத்தனையோ பேரின் சிலைகள் நிறுவப்பட்டுள்ளன. அந்த சிலைகள் யாருடையவை என்பது 99 சதவிகித சென்னை வாசிகளுக்குத் தெரியாது. அப்படியே தெரிந்தாலும் அந்த சிலைக்குரியவர்களின் கொள்கை என்ன? கோட்பாடு என்ன என்பது யாருக்கும் தெரியாது! போலி பகுத்தறிவுவாதிகளுக்குக் கூட தெரியாது, தனது மனோ இச்சைப்படி, தான் விரும்பிய ஒன்றை நியாயப்படுத்துவதற்காக பெரியார் இப்படிக் கூறினார். அவரது வாதத்தில் எந்த பகுத்தறிவும் இல்லை என்பதை அறியாமல் பெரியாரைக் கடவுள் நிலையில் வைத்து அவர் கூறுவதை அப்படியே நம்புகின்றனர்.

பெரியாரின் தத்துவம்

எத்தனையோ பேர் சாகிறார்கள். ஏதோ இரண்டொருவர்கட்குத்தான் நாம் நினைவு நாள் கொண்டாடுகிறோம். செத்துப் போனவர்களின் பணத்தை உத்தேசித்தோ, படிப்பை உத்தேசித்தோ, அதிகாரம், பட்டம், பதவி, அறிவு, சாமர்த்தியம் முதவியவைகளைப் பற்றியோ நாம் எவருக்கும் நினைவு நாள் கொண்டாடுவதில்லை. இவைகள் காரணமாக நாம் எவரையும் போற்றுவதுமில்லை; துதிப்பதுமில்லை.

பணத்தால் ஒரு மனிதனை மதிப்பதென்றால், ரிசர்வ் பாங்கியைத்தான் மதிக்க வேண்டும். படிப்பால் ஒரு மனிதனை மதிப்பதென்றால் பெரிய லைப்ரரியைத் தான் மதிக்க வேண்டும். அறிவால் ஒருவனை மதிக்க வேண்டுமானால் ‘என்சைக்ளோபீடியா’ ரேடியோ முதலியவைகளை மதிக்க வேண்டும். இப்படி அனேகவற்றை - உயிரில்லாதவைகளிலும் காணலாம். ஆதலால், நாம் மதிப்பது, பேசுவது, நினைவுறுவது என்பவையெல்லாம் இவைகளை உத்தேசித்தல்ல. (‘குடிஅரசு’ 14-4-1945)

இதைவிட பயங்கரமான தத்துவத்தையும் பெரியார் கூறி இருக்கிறார். பணக்காரர்கள் என்பதற்காக நாங்கள் படம் திறக்கவில்லை என்று கூறியதோடு நிறுத்திக் கொள்ளாமல் சூப்பரான தத்துவம் ஒன்றையும் சொல்லியிருக்கிறார்.

பணக்காரன் என்பதன் பொருளைக்கூட விளங்காமல் ரிஸர்வ் வங்கியை பணக்காரன் என்று கூற வேண்டுமாம்! லைப்ரேரிதான் பெரிய படிப்பாளியாம்! என்சைக்ளோபீடியாதான் பெரிய அறிவாளியாம்! இதிலிருந்து பெரியாரிடம் ஆழமான சிந்தனை எதுவும் இருந்ததில்லை என்பதும், அவரைப் பின்பற்றுவோர் கண்ணை மூடிக்கொண்டுதான் பின்பற்றுகின்றனர் என்பதும் மேலும் தெளிவாகிறது.
இன்னும் வரும் இன்ஷா அல்லாஹ்...


போலி பகுத்தறிவுவாதிகளோடு விவாதிக்க உணர்வு இதழ் அறைகூவல். உண்மை ஏட்டுக்கு பதிலடி பாகம் - 17

திருக்குறள் பற்றி பெரியார் பெருமளவுக்கு முரண்பட்டு தனது கருத்துக்களை கூறியிருக்கிறார். பகுத்தறிவுக்குப் பொருந்தாத காரணங்களைக் கூறி திருக்குறளை நியாயப்படுத்தி இருக்கிறார். அவற்றை இப்போது காண்போம்.

குறள் - ஹிந்துமத கண்டனப் புத்தகம் என்பதையும், அது சர்வமதத்திலுள்ள சத்துக்களை எல்லாம் சேர்த்து எழுதப்பட்டுள்ள மனித தர்ம நூல் என்பதையும் எல்லோரும் உணரவேண்டும். விரும்பிப் படித்து அதன்படி நடக்கவேண்டும். ஒவ்வொருவரும் தான் ஹிந்துவல்ல தராவிடனே - திருக்குறளானே என்று கூறிக் கொள்வதில் பெருமையடைய வேண்டும். விபூதியையும் நாமத்தையும் விட்டொழிக்கவேண்டும். புராணங்களைப் படிக்கக் கூடாது. என்ன மதம் என்றால் குறள் மதம், மனித தர்ம மதம் என்று சொல்லப் பழக வேண்டும். யார் எதைச் சொல்லிய போதிலும் எது எத்தன்மையுடையதாயிருப்பினும் ஒவ்வொருவரும் நன்கு சிந்தித்துப் பார்த்து ஆராய்ச்சி செய்து பார்த்து பிறகே எது உண்மை என்பதை முடிவு செய்ய வேண்டும். (விடுதலை 10-08-2008)

மேலும் பெரியார் கூறுவதைக் கேளுங்கள்.

இனி முஸ்லிம்கள் தங்களின் பாதுகாப்புக்காக எதாவது ஒரு கட்சியில் சேர்ந்து கொள்வதுதான் நல்லது. இன்றுள்ள அம்மாகாண முஸ்லிம் தலைவர்கள் சொற்ப சலுகைகளுக்காகவும் பயந்துக்காகவும் சுயநலத்துக்காகவும் காங்கிரஸ்காரர்களின் காலடியில் இருந்து கொண்டு வருகின்றனர். தமக்குக் கிடைக்கும் சலுகைக்காக முஸ்லிம் இனத்தையே காட்டிக்கொடுக்கத் துணிந்த அவர்களைக் கோழைகளாக்கிவிட்டனர். இதை முஸ்லிம் பாமர மக்கள் உணர்ந்து கொள்ள வேண்டும். காங்கிரசுடன் சேர்ந்து கொள்வதாயிருந்தால் தாராளமாய்ச் சேர்ந்து கொள்ளுங்கள். நாங்கள் வேண்டாம் என்று கூறவில்லை.

100க்கு 90 பேராயுள்ள எங்களையே ஏமாற்றிக் கொண்டிருக்கும் பார்ப்பனாகளா 100க்கு 7 பேரான உங்களுக்கு வளைந்து கொடுத்துவிடப் போகிறார்கள். எங்களைப் பொறத்தவரை இன்னும் நாங்கள் உங்களை எங்கள் உடன் பிறந்தவர்களாகத்தான் கருதி வருகிறோம்.

நீங்களும் குறள் மதக்காரர்கள் என்றே கருதுகிறோம். நாங்களும் உங்களைப் போல் ஹிந்து மதத்தை வெறுக்கிறோம் என்பதோடு குறளை ஒருபோதும் வெறுப்பவர்கள் அல்ல. ஒன்றுமே முடியாது போனால் உங்களைப் போன்று குல்லாயாவது போட்டுக்கொள்ளலாம் என்றுதான் நாங்கள் கருதியிருக்கிறோம். எனவே எங்கள் இனத்தவர் நீங்கள் என்பதற்காக உங்களை இந்த அளவுக்கு அளவளாவும் ஆதரிக்கும் எங்கள் கழகத்தில் வேண்டுமானாலும் சேருங்கள். அல்லது வடநாட்டவனால் பல கோடி செலவிட்டு பத்திரிக்கைகளைக் கொண்டு தீவிரப் பிரச்சாரம் செய்து ஹிந்துக்களைத் தூண்டிவிட்டு உங்களைக் கொள்ளையடிக்க நினைக்கும் பார்ப்பனர்களோடாவது சேர்ந்துகொள்ளுங்கள். (விடுதலை 10-08-2008)

முஸ்லிம்களுடைய குறைவான எண்ணிக்கையுடைய கிறிஸ்தவர்களுக்கும் சொல்கிறேன். கிறிஸ்தவர்களாகிவிட்டதாலேயே நீங்கள் உயர்ந்தவர்களென்று கருதிக் கொண்டு விடாதீர்கள். நீங்களும் குறள் மதக்காரர்கள். பைபிளுக்கு விரோதமாக குறளில் ஒன்றும் கிடையாது. பார்ப்பனர்களின் தயவுக்காக வேண்டி சுயமரியாதை இழந்துவிடாதீர்கள். உங்கள் நன்மையைப் பாதுகாத்துக் கொள்வதாயிருந்தால், ஜாதி சமய பேதமின்றி பாடுபடும் திராவிடர் கழகத்தில் சேருங்கள். திராவிடர் கழகம் திருவள்ளுவர் குறளைப் பின்பற்றி நடந்து வரும் கழகம். இந்நாட்டில் மனதர்மம் ஒழிந்து மனிதத் தன்மை ஏற்படப் பாடுபட்டு வரும் ழகம். அதற்குக் குறள்தான் வழிகாட்டி. எந்த முன்னேற்றத்திற்கும் விரோதமில்லாமல் பணியாற்றிவரும் கழகம் என்பதை உங்களால் உணர்ந்து, ஆன எல்லா உதவியையும் அதற்களித்து ஆதரியுங்கள். (விடுதலை 10-08-2008)

தமிழ் நூல்களையெல்லாம் பதினெட்டாம் பெருக்கில் ஆற்றில் போடச் செய்தும், நெருப்பில் பொசுக்கிப் பாழாக்கியும் விட்டனர் பார்பனர். எஞ்சியிருப்பது குறள் ஒன்றேயாகும் நமது திருவள்ளுவர் வகுத்த இக்குறள் வழிச் சென்றால் நம் நாட்டுக்கு மட்டுமின்றி வடநாட்டுக்கும் உலகத்துக்குங்கூட நாம் நன்னெறி காட்டியவர்கள் என்ற பெருமையை மீண்டும் அடைய முடியும். (விடுதலை 22-03-1960)

இதன் மூலம் பெரியார் பல விஷயங்களைக் கூறுகிறார்.

திருக்குறள் ஹிந்து மதத்தை கண்டிக்கும் நூல்.

எல்லா மதங்களிலும் கூறப்பட்ட நல்ல விஷயங்களின் தொகுப்பாக திருக்குறள் அமைந்துள்ளது.

இந்துக்கள் மட்டுமின்றி முஸ்லிம்களும் திருக்குறளை ஏற்க வேண்டும்.

என்றெல்லாம் பல விதங்களில் திருக்குறளைப் புகழ்ந்து பேசிய பெரியார் தனது மேற்கண்ட கூற்றுக்கு தானே எவ்வாறு முரண்படுகிறார் என்று பாருங்கள்.

அவரது குறளில் இந்திரன், பிரம்மா, விஷ்ணு முதலிய தெய்வங்களையும் மறுபிறப்பு, சுவர்கம், நரகம், மேலோகம், பிதுர், தேவர்கள் முதலிய ஆரிய மத சம்பிரதாயங்களையும், மூடநம்பிக்கைகளையும் கொண்ட விஷயங்களைப் பார்க்க காணலாம். (20-01-1929 குடியரசு இதழில் பெரியார்)

திருக்குறள் இந்துமதக் கண்டன நூல் என்று ஒரு பக்கம் கூறிக்கொண்டு இன்னொரு பக்கம் இந்து மதத்தில் கூறப்பட்ட அனைத்து தவறான கொள்கைகளும் திருக்குறளில் உண்டு என்கிறார்.

கீதை ராமாயணம் ஆகிய நூல்களை என்ன காரணம் கூறி பெரியார் ஒழிக்கச் சொன்னாரோ அந்தக் காரணங்கள் அனைத்தும் திருக்குறளிலம் உண்டு என்று மேலே ஒப்புதல் வாக்கு மூலம் தருகிறார்.

திருக்குறளில் சில நல்ல கருத்தக்கள் உள்ளன என்பதால் அதை ஆதரித்தார் என்று கூறினால் அதுவும் சரியான கருயான கருத்தாக இருக்க முடியாது. ஏனெனில் எல்லா மதங்களிலும் உள்ள நல்ல கருத்துக்களை திருக்குறள் உள்ளடக்கி உள்ளது என்று அவரே கூறியதை மேலே எடுத்துக் காட்டியுள்ளோம். எல்லா மதங்களிலும் நல்ல கருக்துக்கள் உள்ளன என்று பெரியார் இதன் மூலம் ஒப்புக் கொள்கிறார்.

வள்ளுவர் குறளையும், அந்தபடியே அப்போது பகுத்தறிவுக்கு ஏற்றதல்ல என்று கண்டித்து வந்தேன். எல்லாவற்றையும் குறை சொல்லும்போது பலர் என்னிடம், 'எல்லாம் போய்விட்டால் நமக்கு என்னதான் நூல்?' என்று கேட்பார்கள். நான் 'இங்கே இருக்கிற மலத்தினால் கெட்ட நாற்றம் வீசுகிறது. அதை எடுத்து விடு என்று கூறினால் அந்த இடத்தில் என்ன வைப்பது என்றா கேட்பது..?' என்று பதில் கூறுவேன். (விடுதலை 01-06-1950 ல் பெரியார்)

திருவள்ளுவன் அக்காலத்துக்கு ஏற்ற வகையில் ஆரியக் கருத்துக்கு ஆதரவு கொடுக்கும் அளவில் பகுத்தறிவைப்பற்றி கவலைப்படாமல் நீதி கூறும் முறையில் தனது மத உணர்ச்சியோடு ஏதோ கூறிச்சென்றார். (தமிழும் தமிழரும் என்ற நூலில் .வே.ரா)

தற்காலம் நமது தமிழ்நாட்டில் வழங்கப்பெறும் நீதி நூல்களிலெல்லாம் திருவள்ளுவனால் இயற்றப்பட்டது என்று சொல்லப்படும் குறள் என்னும் நீதி நூலே மிகவும் மேலானது என்று சொல்லப்படுகின்றதானாலும் அதையும் பார்ப்பனர்களோ சைவர்களோ வைணவர்களோ மற்றும் எந்தப் பிரிவினர்களோ அடியோடு காரியத்தில் ஒப்புக்கொள்ளுவதென்றால் முடியாத காரியமாகவே இருக்கும். என்றாலும் திருவள்ளுவரைப் பற்றி ஏதாவது குற்றம் சொல்லிவிட்டால் பண்டிதர்களும் பெரும்பாலும் சைவர்களும் சண்டைக்கு மாத்திரம் வந்துவிடுவார்கள். பார்ப்பனர்களென்றாலோ திருவள்ளுவரின் பெயரைச் சொன்னாலே சண்டைக்கு வந்துவிடுவார்கள்.

இவ்வளவு இரந்தாலும் திருவள்ளுவர் யார்? என்ன ஜாதி? என்ன மதம்? அவரது கொள்கை என்ன என்பதில் இன்னமும் எல்லோருக்கும் சந்தேகமாகவே இருக்கிறது. சைவர்கள் திருவள்ளுவரைத் தம் சமயத் தலைவர் என்று பாத்தியம் கொண்டாடிக் கொள்கிறார்கள். வைணவர்களில் சிலர் அவரை வைணவர் என்று கொண்டாடுகின்றனர். சமணர்கள் அவரைத் தம் சமயத்தவர் என்கின்றார்கள். தாழ்த்தப்பட்ட வகுப்பார்களில் ஒரு சாராராகிய பறையர்கள் என்று சொல்லப்படுபவர்கள் திருவள்ளுவரைத் தம் இனத்தவர் என்று சுதந்திரம் பாராட்டுகிறார்கள். அவரைப் பற்றி கிடைக்கும் புராணமோ அல்லது அவரது சரித்திரக் கதையோ மிகவும் அசம்பாவிதமும் ஆபாசமானதுமாய்க் காணப்படுகின்றது.

இவ்வளவு புறச்சான்றுகளையும் விட்டுவிட்டு அகச்சான்று என்பதாகிய திருவள்ளுவர் குறளைப் பார்த்தாலோ, அதுவும் மயக்கத்திற்கிடமானதாக இருக்கின்றதே ஒழிய ஒரு தெளிவுக்கு ஆதாரமானதாய்க் காணப்படவில்லை. அவரது குறளில் இந்திரன், பிரம்மா, விஷ்ணு முதலிய தெய்வங்களையும் மறுபிறப்பு, சுவர்கம், நரகம், மேலோகம், பிதுர், தேவர்கள் முதலிய ஆரிய மத சம்பிரதாயங்களையும், மூடநம்பிக்கைகளையும் கொண்ட விஷயங்களைப் பார்க்கலாம்.

எனவே இவற்றைக் கொண்டு திரவள்ளுவர் யாராயிருக்கலாம் என்று பார்ப்போமானால், அவர் தற்காலப் பார்பனர்களை மாத்திரம் குற்றம் சொல்லிக் கொண்டு அவர்களால் கற்பிக்கப்பட்ட தெய்வங்கள், பராணங்கள் முதலியவற்றை எல்லாம் ஏற்றுக் கொண்டு, பார்ப்பனியம் என்னும் பார்ப்பனக் கொள்கைகளை ஒரு சிறிதும் தளர்த்த மனமில்லாதவர்களாய் இருந்து கொண்டு தங்களைப் பெரிய சீர்திரத்தக்காரர்கள் என்றும் தாங்கள் பெரிய கல்வி கேள்வி ஆராய்ச்சி முதலியவைகளில் தேர்ச்சி பெற்ற வல்லவர்கள் என்றும் சொல்லிக்கொண்டு தங்களை வெளியில் சமரச சன்மார்க்கச் சமயத்தவர் என்றும், உள்ளுக்குள் சைவ சமயம் தான் தன்னுடைய மதம் என்றும் மற்றும் இதுபோல் உள் ஒன்றும் புறமொன்றும் செய்கை ஒன்றுமாய் இருந்து கொண்டு தங்களை பெரிய சீர்திருத்தக்காரர்கள் என்று சொல்லிக்கொள்ளும் இப்போதைய சீர்திருத்தக்காரரைப் போல்தான் காணப்படுகிறார்.

இவை எப்படி இருந்தாலும் திரவள்ளுவரின் பெண்ணுரிமைத் தன்மையை பற்றிக் கவனித்தால் பெண்களுக்கு அவர் கூறிய குறளிலள்ள நீதிகள் ஒருபுறம் இருக்க, திருவள்ளுவன் மனைவியாகிய வாசுகியம்மையாரின் சரித்திரத்தைக் கேட்போர் மனம் பதறாமலிரக்க முடியாது. அதாவது வாசுகியம்மையாரைத் திருவள்ளுவர் தம் மனைவியாக ஏற்றுக் கொள்ளும் முன் ஆற்று மணலைக் கொடுத்து சாதம் சமைக்கச் சொன்னாராம். அதாவது வாசுகி கற்பள்ளவரா அல்லவா என்று பரிட்சிக்க. அவ்வம்மையார் அந்தபடியே மணலைச் சாதமாகச் சமைத்து கொடுத்து திருவள்ளுவருக்கு தமது கற்பைக் காட்டினாராம். அம்மையார் கிணற்றில் நீர் இறைக்கும்போது நாயனார் அம்மையாரைக் கூப்பிட, அம்மையார் கயிற்றை அப்படியே விட்டுவிட்டு வந்தபோது கயிறு கிணற்றில் விழாமல் அப்படியே தொங்கிக் கொண்டிருந்ததாம்.

திருவள்ளுவர் ஒருநாள் பகலில் நூல் நூற்கும்போது நூற்கதிர் கீழே விழ, உடனெ அம்மையாரைக் கூப்பிட்டு, 'விளக்கேற்றிக் கொண்டுவா, நூற்கதிரைத் தேடவேண்டும்' என்று சொல்ல அம்மையார் 'பகல் நேரத்தில் விளக்கு எதற்கு' என்று கேட்காமல் - கேட்டால் பங்கம் வந்துவிடும் எனக் கருதி உடனே விளக்குப் பற்றவைத்துக் கொண்டுவந்து கொடுத்தார்களாம்.

உரு நாள் நாயனார் பழைய சாத் சாப்பிடும்போது 'சாதம் சுடுகின்றது' என்று சொன்னவுடன் அம்மையார் 'பழைய சாதம் சுடுமா' என்று கூடக் கேட்காமல் - கேட்டால் பதிவிரத தன்மை கெட்டுப்போகுமே என்று கருதி உடனே விசிறி எடுத்துக்கொண்டு வந்து வீசி ஆற்றினாராம். திருவள்ளுவர் அம்மையாரை தினமும் ஒரு டம்ளரில் தண்ணீரும் ஒரு ஊசியும் தனியாகக் கொண்டு வந்து வைத்து விட்டு சாதம் பரிமாறும்படி கட்டளையிட்டிருந்தாராம். அவ்வம்மையாரும் 'இது எதற்காக' என்று கேட்காமல் - கேட்டால் பதிவிரத தன்மை கெட்டுப்போகுமே என்று கருதிக் கொண்டு தினமும் அந்த படியே செய்து வந்தாராம். ஆனால் அம்மையாரின் மரணத் தருவாயில் அம்மையார் உயிர் போகாமல் ஊசலாடிக் கொண்டிருக்க, அது ஏன் என்று திருவள்ளுவர் அம்மையாரைக் கேட்கும்போது அம்மையார் பயந்துகொண்டு 'தினமும் பாத்திரத்தில் தண்ணீரும் ஊசியும் வைக்கச் சொன்னீhகளெ அது எதற்காக என்று தெரிந்து கொள்ளவேண்டும் என்கிற ஆசை முடிவு பெறாமல் இருப்பதால் உயிர் போகாமல் ஊசலாடி மரணாவஸ்தைப்படுகிறேன்' என்று சொன்னாராம். பிறகு திருவள்ளுவர் தயவு செய்து பெரிய மனது வைத்து அதன் காரணத்தை, அதாவது சாம்பிடும்போது அன்னம் கீழே விழுந்தால் அந்த ஊசியில் குத்தியெடுத்து அந்த டம்ளர் தண்ணீரில் கழுவுவதற்கு என்று சொன்னாராம். அதன் பிறகுதான் அம்மையாரின் உயிர் நீங்கிற்றாம்.

இது திருவள்ளுவர் புராணத்தில் உள்ள அவரது மனைவியின் சரித்திரம். எனவே இது இடைச் செருகலாகவோ, கற்பனைக் கதையாகவோ இல்லாமல் உண்மைக் கதையாய் இருந்தால் திருவள்ளுவரின் பெண்ணுரிமை என்ன என்பதையும், கற்பனையாக இருந்தால் கற்பனையல்லாத புராணம் எது? அதற்கு என்ன பரிட்சை? என்பதையும் அறிஞர்கள் வெளிப்படுத்துவார்களாக. (ஜனவரி 20, 1929 'குடியரசு' பெரியார் சித்திரபுத்திரன் எனும் புனைப் பெயரில் எழுதிய கட்டுரை)

திருக்குறள் எவ்வளவு மூடத்தனம் நிறைந்தது என்று பின்வரும் கற்பனை உரையாடல் மூலம் பெரியார் தெளிவு படுத்தகிறார்.

நா : தெய்வம் தொழாள் கொழுநன் தொழுதெழுவாள் பெய்யெனப் பெய்யு மழை என்கின்ற பொய்யாமொழிப் புலவரின் வேதவாக்கை கேட்டிருக்கின்றீர்களா?

. பெண் : ஆம் கேட்டிருக்கின்றேன்.

நா : கற்புடைய மங்கையர் மழை பெய்யென்றால் பெய்யும் என்கின்ற வேதவாக்கையும் கேட்டிருக்கின்றீர்களா?

. பெண் : ஆம் கேட்டிருக்கின்றேன்.

நா : சரி. ஊரில் மழை பெய்து மூன்று வருஷமாச்சுது. குடிக்கத் தண்ணீh கிடையாது. தயவு செய்து ஒரு இரண்டு உழவு (இரண்டு அங்குலம்) மழை பெய்யச் சொல்லுங்கள் பார்ப்போம்.

சித்திரபுத்திரன் எனும் புனைப் பெயரில் பெரியார் அவர்கள் எழுதியது.

சில விஷயங்களை ஒருவர் சரியாக விளங்கிக் கொள்ளாமல் இருந்து பின்னர் தமது கருத்தை மாற்றிக் கொண்டால் அது முரண்பாடு ஆகாது என்று சிலர் சப்பைக் கட்டு கட்டுவார்கள்.

இது எப்போது சரியான கருத்தாக இருக்கும்? திருக்குறளில் உள்ள தவறுகளை கவனிக்காமல் இருந்துவிட்டு பின்னர் தவறை அறிந்து மாற்றிக் கொண்டால் தான் அது சரியானதாகும். திருக்கறளில் உள்ள தவறுகளை விமர்சனம் செய்து விட்டு பின்னர் திரக்குறளை ஆதரித்தால் அப்போது இந்த கருத்து சரியாகாது.

திருக்குறளில் உள்ள தவறுகளை அறிந்த பின்னர் சந்தர்ப்பவாதத்துக்காகவோ கொள்கையில் சமரசம் செய்து கொள்வதற்காகவோ முரண்படுவதாகத்தான் எடுத்துக் கொள்ள முடியும். திருக்குறளின் குறைகளை விமர்சித்துவிட்டு பின்னர் அதை ஆதரிப்பதை மேலே நாம் எடுத்துக் காட்டியதில் இருந்து அறிந்து கொள்ளலாம்.

திருக்குறளைப் பெரியார் புகழ்ந்ததை மட்டும் தான் வீரமணி வகையறாக்கள் வெளியிட்டு திருக்குறளை தூக்கிப் பிடிக்கிறார்களெ தவிர பகுத்தறிவுக்கு எதிரான திருக்குறளை விமர்சனம் செய்த பெரியாரின் கூற்றுக்களை இருட்டடிப்பு செய்து தாங்கள் பகுத்தறிவை வந்த விலைக்கு விற்று விட்டவர்கள் என்பதைச் சொல்லாமல் சொல்லவேண்டுமா?
இன்னும் வரும் இன்ஷா அல்லாஹ்.

Blog Archive