முஸ்லிம்களையும் நபிகள் நாயகத்தையும் வம்பிக்கிழுத்த பொய் பகுத்தறிவுவாதிகளின் "உண்மை" எனும் ஏட்டுக்கு உணர்வு இதழ் விடுத்துக்கொண்டிருக்கும் அறைகூவின் தொகுப்பு!


போலி பகுத்தறிவுவாதிகளோடு விவாதிக்க உணர்வு இதழ் அறைகூவல். உண்மை ஏட்டுக்கு பதிலடி பாகம் - 10

போலி பகுத்தறிவுவாதிகளான திராவிர் கழகத்தினர் இஸ்லாத்தை வம்புக்கிழுத்ததன் அடிப்படையில் அவர்கள் மதவாதிகளைவிட அதிக மூட நம்பக்கையுள்ளவர்களாக இருப்பதை தக்க சான்றுகளுடன் அம்பலப்படுத்தி வருகின்றோம்.

நமது வாதங்களுக்கும், அறிவுப்பூர்வமான கேள்விகளுக்கும் பதில் சொல்ல வக்கற்ற போலி பகுத்தறிவாளர்கள், நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பல திருமணங்கள் செய்தது ஏன் என்று இணைய தளங்கள் மூலமாக விஷமப்பிரச்சாரம் செய்வதை பதிலாக்கியுள்ளனர்.

மணியம்மை என்ற இளம் வயதுப் பெண்ணை பெரியார் என்ற முதியவர் மணந்தது சரியா என்பது நமது கேள்வியல்ல.

ஆணோ பெண்ணோ தமது விருப்பத்திற்கேற்ப அதிக வயதுடையவரை மணந்தால் அதை இஸ்லாம் மறுக்காது.

நமது கேள்வியும் அதைப் பற்றியது அல்ல.

வயதான கிழவர்கள் இளம்பெண்ணை மணக்கக் கூடாது என்பதைக் கொள்கையாகக் கொண்ட ஒருவர், தானே அதை மீறியது ஏன் என்பதுதான் மணியம்மை திருமணம் குறித்த நமது கேள்வி.

இதற்கு பதில் சொல்ல துப்பு கெட்டவர்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் திருமணம் பற்றி இணைய தளங்களில் கேள்வி எழுப்புவது அவர்களின் பகிரங்கத் தோல்வியை எடுத்துக் காட்டுகிறது.

(''நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பல திருமணங்கள் செய்தது ஏன்'' என்ற எமது நூலில் இதுபற்றி மிக விரிவாக ஏற்கனவே நாம் பதிலளித்துள்ளோம்)

போலி பகுத்தறிவுவாதிகள் நமது கேள்விகளுக்கு நேரடியாக பதில் தரட்டும். அல்லது நபிகள் நாயகம் அவர்களின் பல திருமணங்கள் உட்பட அனைத்து விஷயங்களைப் பற்றியும் பகிரங்க விவாதத்துக்கு முன்வரட்டும் என்பதை அழுத்தமாகப் பதிவு செய்கிறோம்.

இனி எடுத்துக்கொண்ட தலைப்புக்கு வருவோம்.

பெரியாரிடம் காணப்பட்டது போன்ற முரண்பாடுகள் கொண்ட ஒரு தலைவரை தமிழகத்தில் காண்பது அரிது என்பதற்கான மற்றொரு சான்றைப் பாருங்கள்.

''பெண்கள் வீட்டு வேலை செய்வது, கோலம் போடுவது, சாணி தட்டுவது, பாத்திரம் கழுவுவது, கும்மியடிப்பது, கோலாட்டமடிப்பது என்பது போன்ற அடிமை வேலைக்குத் தயார் செய்யாதீர்கள்''. (குடியரசு : 08-03-1936)

பெண்களை எப்படி நடத்த வேண்டும் என்று இதுபோன்ற பல அறிவுரைகளைப் பெரியார் கூறினார். ஆனால் அவர் கூறிய அனைத்தையும் அவரே முதலில் மீறக் கூடியவராக இருந்தார்.

நாகம்மாள் என்ற முதல் மனைவி மறைந்தபோது நாகம்மாளை பெரியார் எப்படி நடத்தினார் என்பதை அவரே வெளிப்படையாக அறிவித்தார்.

''நாகம்மாளை நான் தான் வாழ்க்கைத் துணையாகக் கொண்டு இருந்தேனேயில்லாமல் நாகம்மாளுக்கு நான் வாழ்க்கைத் துணையாக இருந்தேனா என்பது எனக்கே ஞாபகத்துக்கு வரவில்லை...''

''...பெண்கள் சுதந்திர விஷயமாகவும், பெண்கள் பெருமை விஷயமாகவும் பிறத்தியாருக்கு நான் எவ்வளவு பேசுகிறேனோ, போதிக்கிறேனே அதில் நூறில் ஒரு பங்கு வீதமாவது என்னருமை நாகம்மாள் விஷயத்தில் நான் நடந்து கொண்டிருந்தேன் என்று சொல்லிக்கொள்ள எனக்கு முழு யோக்கியதை இல்லை.''

''...ஆனால் நாகம்மாளோ, பெண் அடிமை விஷமாகவும் ஆண் உயர்வு விஷயமாகவும் சாஸ்திர புராணங்களில் எவ்வளவு கொடுமையாகவும் மூர்க்கமாகவும் குறிப்பிட்டிருந்ததோ அவற்றுள் ஒன்றுக்குப் பத்தாக நடந்து கொண்டிருந்தார் என்பதையும், அதை நான் ஏற்றுக்கொண்டிருந்தேன் என்பதையும் மிகுந்த வெட்கத்துடன் வெளியிடுகின்றேன்.'' (-குடியரசு : 14-05-1933)

ஊருக்கெல்லாம் எதை மிக அதிகமாக வலியுறுத்திப் பெரியார் பேசி வந்தாரோ அதை மிக அதிக அளவில் தெரிந்து கொண்டே பெரியார் மீறியுள்ளார். எந்த உரிமைகள் பெண்ணுக்குக் கொடுக்க வேண்டும் என்றாரோ அதை அவரது மனைவிக்குக் கூட அவரால் கொடுக்க முடியவில்லை.

தான் போதிக்கும் தத்துவம் தன்னாலேயே நடைமுறைப்படுத்த முடியாத ஒன்று என்று அறிவித்த பின்னர் இதில் என்ன நேர்மை உள்ளது?

"தோழர்களே! ஜாதி ஒழிப்புக்காரர்கள் வீட்டில் உருவச் சின்னங்களோ, மதக் குறியோ சாஸ்திர, சம்பிரதாய நடப்போ இருக்கக் கூடாது. கண்டிப்பாய் இருக்கக் கூடாது." (-விடுதலை : 17-08-1962)

இவரது இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் தன் அளவில் மட்டுமின்றி தன் குடும்பத்திலும் இவர் கூறும் கொள்கையை கண்டிப்பாப கடைபிடிக்க வேண்டும் என்று கூறும் பெரியார், தன் மனைவியை சாஸ்திர, சம்பிரதாயங்களில் கூறியபடியே நடத்தியிருக்கிறார் என்பது எவ்வளவு பெரிய மோசடி!

இதை நாம் விமர்சிக்கும்போது இந்த விமர்சனம் நியாயம்தானே என்று எடுத்துக் கொள்ளாமல் பெரியார் என்ற கடவுள் மேல் பக்தி கொண்டு கோபப்படுவது எந்தவகைப் பகுத்தறிவு?

எது பெண்ணுரிமை என்று பெரியார் வாதிட்டாரோ அதை முதல் மனைவிக்கு மட்டுமின்றி இரண்டாம் மனைவிக்கும் அவர் வழங்கவில்லை.

வயதான காலத்தில் மூத்திரக் குழாயில் அடைப்பு எற்பட்டபோது மணியம்மையை பணந்து தனக்கு பணிவிடை செய்வத்காகவே பயன்படுத்திக் கொண்டார்.

"எனது காயம் சற்ற கடினமானதுதான், எளிதில் குணமாகாது. மூத்திர வழியே கற்கள் இருக்கின்றன. அவை கரைய மாதக்கணக்கில் காலமாகும். ஒரு சமயம் அபரேஷன் தேவையிருந்தாலும் இருக்கலாம். ஆனாலும் நான் நான் பயப்படவில்லை. எதற்கும் நான் தயாராக இருக்கிறேன். மணியம்மையார் கவனிப்பும், உதவியும் அளவிடற்கரியது." (-விடுதலை : 17-09-1967)

பெரியாரின் மூத்திரத்தை சுத்தம் செய்வது தான் அவரது மனைவியின் கடமையா? இதைத் தானே பெண்ணுரிமைக்கு எதிரானது என்று பெரியார் கூப்பாடு போட்டார். தனக்குச் சேவை செய்வதற்காக ஒரு இளம் பெண்ணை மணந்து பயன்படுத்திக் கொண்டது அவர் போதித்த பெண்ணுரிமைக்கு எதிரானது என்று அவரது பக்தர்களுக்கு ஏன் தோன்றவில்லை?

"மணியம்மை தானாக விரும்பித்தான் இதை செய்தார்" என்று இன்று போலி பகுத்தறிவுவாதிகள் கூறும் சமாதானம் ஏற்கத்தக்கது அல்ல. பெரியார் பாஷையில் சொல்வதானால் அயோக்கியத்தனம்.

எல்லா மனைவிமார்களும் விரும்பியே கணவனுக்குப் பணிவிடை செய்வதைத் தான் பெரியார் கண்டித்தார். அவ்வாறு விரும்புவதே தவறு என்பது தான் அவரது வாதம்.

மணியம்மை விரும்பினாலும் அதை பெரியார் எற்றிருக்கக் கூடாது. என்பதை இவர்கள் சிந்திக்க மறுப்பது ஏன்? கண்ணை மூடிக்கொண்டு நவீன தெய்வமாக பெரியாரைக் கருதிக் கொண்டதுதான்.

எனவே, தான் பேசிய எந்த ஒன்றையும் பெரியார் முதலில் மீறியவராக இருந்தார் என்பது இதன் மூலம் நிரூபணமாகின்றது.

''பெண்கள் வீட்டு வேலை செய்வது, கோலம் போடுவது, சாணி தட்டுவது, பாத்திரம் கழுவுவது, கும்மியடிப்பது, கோலாட்டமடிப்பது என்பது போன்ற அடிமை வேலைக்குத் தயார் செய்யாதீர்கள்''. (குடியரசு : 08-03-1936)

மேற்கண்ட போதனையை மற்றொரு விஷயத்திலும் தானே மீறினார். அதை அடுத்த இதழில் காண்போம். இன்ஷா அல்லாஹ்.

Blog Archive